சிறையில் உள்ள கணவனுக்காக ஹெரோயின் கடத்திய மனைவி
Sri Lanka Police
Sri Lanka
By pavan
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்காக சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய மனைவியை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோதே காற்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்