வறட்சியான காலநிலை : நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை தடையின்றி வழங்குவது கடினமாக அமையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது சபை அவ்வாறான நீர் வெட்டு எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும், நிலவும் காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக அமையும்.
நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
அம்பத்தலை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும், உயர்ந்த பகுதிகளில் வசிப்போருக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் கிடைத்து வருகின்றது.

எதிர்வரும் காலங்களில் மழையை எதிர்பார்க்கின்றோம், அதுவரை தற்போதுள்ள நீர் கொள்ளளவை பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குறைந்த அழுத்தத்தில் நீர் கிடைக்கும் பகுதிகளுக்கு தற்போது பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்