பூட்டானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்
பூட்டானில் 3.5 ரிக்டர் அளவில் நிலரநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (1) இரவு 9.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மட்டத்தில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்
நிலநடுக்கத்தின் மையப்பகுதி அட்சரேகை 27.14° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 89.05° கிழக்கில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EQ of M: 3.5, On: 01/01/2026 21:52:30 IST, Lat: 27.14 N, Long: 89.05 E, Depth: 5 Km, Location: Bhutan.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 1, 2026
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/WvR94lkmBE
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை நேற்று (01) மாலை 03.10 மணியளவில் 2.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |