சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Dilakshan Oct 28, 2024 08:11 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய செய்தி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்கள் அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்ட சர்சைக்குரிய விடயங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் குழு அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு, “இந்த சேனல் 4 நிகழ்ச்சியில், அசாத் மௌலானா என்ற நபர், நமது புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

விஜித ஹேரத்திற்கு உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்

விஜித ஹேரத்திற்கு உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்

சுரேஷ் சலே - சஹாரான் சந்திப்பு

இக்குற்றச்சாட்டுகளில் பிரதான குற்றச்சாட்டாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சஹாரான் தற்கொலைப்படையினருடன் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக எமது புலனாய்வு அமைப்புகள் கலந்துரையாடல்களை நடாத்தியது என்பதாகும்.


இதன்படி அசாத் மவ்லானா, சஹாரானுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருந்த சுரேஷ் சலேவுக்கும் சஹாரானுக்கும் இடையிலான சந்திப்பு 2018 பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

சனல் 4 க்கு கருத்து தெரிவித்த அசாத் மௌலானாவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் வனாத்தவில்லுவையில் உள்ள சஹாரன்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள வீடொன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், 2019 ஜனவரியில் சிஐடி அந்த இடத்திற்குச் சென்று 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களைக் கண்டுபிடித்ததாகவும் அசாத் மவ்லானா குறிப்பிடுகிறார்.

கோட்டாபய ராஜபக்ச

2018 பெப்ரவரி மாதம் வனாத்தவில்லுவில் சஹாரான் உள்ளிட்ட குழுவினரை சுரேஷ் சலே சந்தித்து ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்பது அசாத் மவ்லானாவின் குற்றச்சாட்டு.

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில! | Easter Attack Channel 4 Case Gammanpila Statement

2023 செப்டம்பர் 5 அன்று சனல் 4 இல் ஒளிபரப்பான சிறிலங்கா ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், பௌத்தத் தலைவரை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் கத்தோலிக்க தேவாலயங்களைத் தாக்கினர் என்பதாகும்.

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நமது இராணுவப் புலனாய்வு அமைப்புகள் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மையா இல்லையா என்பதை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இமாம் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இந்த நியமிக்கப்பட்ட குழுவிற்கு கர்தினால் மற்றும் திசைகாட்டியின் தலைவர்கள் அல்லது வேறு எந்த தரப்பினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

விசாரணையில், இந்த குழு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இந்த நிலத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சனல் 4 சர்ச்சை

அவர்களில் ஒருவர் ஹனிஃபா முஃபிஸ். அவரிடம் விசாரித்ததில், இந்த நிலத்தில் உள்ள வீடு ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தற்காலிக வீடு போல் கட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில! | Easter Attack Channel 4 Case Gammanpila Statement

அதன் படி, பெப்ரவரி 2018 இல் இந்த நிலத்தில் எந்த வீடும் இல்லை, மௌலானாவின் கூற்றுப்படி, சுரேஷ் சலே மற்றும் சஹாரன் குழு அந்த வீட்டில் கலந்துரையாடியதாக கூறியுனார்.

இது அசாத்மௌலானா சனல்  4 இல் கூறியது முழுப் பொய் என்பதை நிரூபிக்கிறது.

நவம்பர் 2016 முதல் டிசம்பர் 2018 வரை, சுரேஷ் சலே  உளவுத்துறை நிறுவனங்களிலிருந்து விலகி, மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றினார்” என கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026