ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள்! ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப் போலவே, பொதுமக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐநா ஆதரவு
அதன்படி, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் சுயாதீனமான, நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட விசாரணை மற்றும் நீதித்துறைச் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |