இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ எனும் போர்க்கப்பல் நேற்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க முறைப்படி வரவேற்றுள்ளனர்.
இந்தக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை கடற்படையினருடன் இணைந்து ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) எனும் விசேட கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்முறைத் திறன் வாய்ப்பு
இதன் மூலம் இரு நாட்டு கடற்படைகளின் முக்குளிப்பு பிரிவுகளுக்கு இடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு சுமுகமான நிகழ்வுகளில் கப்பல் ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கட்டளை அதிகாரி
அத்துடன், நாட்டின் முக்கிய கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆழ்கடல் முக்குளிப்பு ஆதரவு கப்பல் (Diving Support Vessel) வகையைச் சேர்ந்த ‘INS NIREEKSHAK’ கப்பலின் கட்டளை அதிகாரியாக சைலேஷ் குமார் தியாகி என்பவர் கடமையாற்றுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |