ஈஸ்டர் தாக்குதல் : :வத்திக்கானுக்கு அனுர அரசு அளித்த உறுதிமொழி : கோட்டாபயவின் நிலை..!
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, புதிய பாப்பரசர் பதினான்காம் லியோவை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இந்த முறைப்படியான அழைப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாப்பரசரிடம் வழங்கினார். அவர் மார்ச் மாதம் வத்திக்கானுக்குப் பயணம் செய்து இந்த அழைப்பை ஒப்படைத்தார்.
பாப்பரசரின் உத்தேச வருகை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் வத்திக்கானுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை கர்தினால் மால்கம் ரஞ்சித் கையாண்டு வருகிறார்.
அரசாங்கத்தின் மீது கர்தினால் அழுத்தம்
பாப்பரசரின் வருகைக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதே அனுர மற்றும் கர்தினால் இருவரின் நோக்கமாகும்.

அரசாங்கம் வத்திக்கானுக்கு அத்தகைய உறுதிமொழியை வழங்கியுள்ளதாக வத்திக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன. விசாரணைகளில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக கர்தினால் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபயவின் பரிதாப நிலை
இந்த விசாரணைகளின் விளைவாக, கோட்டாபய ராஜபக்ச மீது வெளிநாட்டுப் பயணத் தடை ஒன்றை நீதிமன்றம் சமீபத்தில் விதித்தது.

2013-ல் கர்தினால் மால்கம் ரஞ்சித்தின் ஒருங்கிணைப்பின் மூலம் போப் பிரான்சிஸை இலங்கைக்கு வரவழைத்த அழைப்பிற்கு வழிவகுத்த கோட்டாபய, தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பது விதியின் ஒரு முரண்பாடான திருப்பம் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 5 மணி நேரம் முன்