உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை எடுக்கும்.
திசைதிருப்பும் கலாசாரம்
போராட்டங்கள் மூலம் மக்களின் மனங்களை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருகின்றது.

அதன் காரணமாகவே இந்த விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 12 அல்லது 18 பேர் கொண்ட குழுக்களை வைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் அல்லது தடையும் ஏற்படாது.
விசாரணைகள் சரியான முறையில் முன்னோக்கி நகரும என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்