கிழக்கு மாகாண காணி பிரச்சினை: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth-க்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இன்று (10) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இது உயர்ஸ்தானிகரின் முதல் கிழக்கு மாகாணப் பயணமாகும்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள், கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, கடற்றொழில் தொழில் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாடு போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காணி தொடர்பான பிரச்சினை
மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், மாகாண சபையும் மத்திய அரசும் இணைந்து காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒருங்கிணைந்த செயன்முறை தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்தார்.
இலங்கையின் தொழில்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மிகவும் வலுவான உறவு நிலவுவதாகவும், கிழக்கு மாகாணத்துடனும் நெருக்கமான மற்றும் உறுதியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 1 மணி நேரம் முன்