பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை - கடுமையாக சாடிய அனுரகுமார திஸாநாயக்க

Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Jul 07, 2023 04:38 AM GMT
Report

சட்டங்களை இயற்றுவதனால் மாத்திரம் இலங்கையில் ஊழலை ஒழிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஊழல் வாதியென கூச்சலிட்டவர்கள், தற்போது அவரின் கீழுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இன்று ஆளும் தரப்பில் இருப்பதாகவும் அனுர குமார திஸாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.

பொருளாதார குற்றவாளிகள்

பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை - கடுமையாக சாடிய அனுரகுமார திஸாநாயக்க | Economic Criminals Evading Justice Political Power

இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “விசேடமாக எமது நாடு, பொருளாதார குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை நான் கூறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

தற்போது பொருளாதார குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கும் போது, அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டிய நிலைமை இந்த நாட்டு மக்களுக்கே ஏற்பட்டுள்ளது.

இன்று தொழில் செய்யும் மக்களின் பெருந்தொகையை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார குற்றவாளிகள் இழைத்த குற்றங்களுக்கான இழப்பீடாகவே அவர்கள் இந்த வரியை செலுத்துகின்றனர்.

அதேபோன்று, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கு இந்த பொருளாதார குற்றவாளிகள் மேற்கொண்ட அழிவிற்காக இழப்பீடு செலுத்த நேரிட்டுள்ளது.

அதேபோன்று இந்த பொருளாதார குற்றவாளிகளின் பிரதிபலனாக இன்று எமது நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கான பொருட்களின் விலை உயர்வு, தாங்கி கொள்ள முடியாத வாழ்க்கை செலவு உட்பட பொதுமக்களுக்கு இன்று பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

காலம் முழுவதும் எமது பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை காணப்படுகின்றது.

எனினும் இன்றும் மிகவும் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, சமூகத்தில் வாழ்கின்றனர்.

சிலர் பிரபுகளாகவும் சிலர் சேர் ஆகவும் சிலர் முன்னாள் அதிபர்களாகவும், சிலர் முன்னாள் அமைச்சர்களாகவும், சிலர் உயர்மட்ட அரச அதிகாரிகளாகவும் உள்ளனர்.

ஆகவே இந்த அழிவிற்கு இந்த நாட்டை இழுத்துச் சென்ற இந்த பொருளாதார குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்துவது தொடர்பாக இந்த நாட்டில் மிகப் பாரிய எதிர்பார்ப்பும் விரும்பமும் உள்ளது.

புதிய சட்டமூலம்

பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை - கடுமையாக சாடிய அனுரகுமார திஸாநாயக்க | Economic Criminals Evading Justice Political Power

புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதாக கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டமூலமானது போதுமான ஒன்றாக இல்லாதது எதன் காரணத்தினால்?

25 ஆயிரத்திற்கும் அதிகமாக அரச சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால், நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை எனும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளது.

நிதிச் சுத்தமாக்கல் சட்டம், எந்தவொரு பிரஜையும் தாம் பயன்படுத்தும் பணத்தின் அளவை, எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தாவிடின் அந்த சொத்துக்களை கையகப்படுத்தும் சட்டம் உள்ளது.

அதேபோன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுச் சட்டம், ஊழல் தொடர்பாக மிகவும் வலுவான சட்டம்.

அதேபோன்று குற்றவியல் சட்டத்தில் இங்கு பிரச்சினை இல்லை.

சில சட்டங்களை முழுமை செய்ய வேண்டுமாயின் அதற்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்.

எனினும் தற்போதுள்ள சட்டங்கள் பலவீனமடைந்துள்ளதா?

தற்போதுள்ள சட்டம் பலவீனமானது என்றால், தேங்காய் எட்டை திருடிய நபர் எவ்வாறு சிறை செல்வார்.

லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் சிறை செல்வது எவ்வாறு?

கிராம உத்தியோகத்தர் பணம் பெற்றார் என்பதற்காக எவ்வாறு சிறை செல்வார்.

இல்லை, அரசியல் அதிகாரம் காரணமாகவே இருக்கும் சட்டங்களில் இருந்து குற்றவாளிகள்  பாதுகாக்கப்படுகின்றனரா?

இந்த ஊழல் வலையமைப்பில், அரச அதிகாரிகளில் பாரிய பங்கானவர்கள் இருக்கின்றனர்.

இவர்களோடு, உயர் அதிகாரிகளின் கையாட்கள், காவல்துறையிலுள்ள சிலர் டீல் போடும் வர்த்தகர்கள், விரும்பியோ விரும்பாவிட்டாலோ சட்டத்தை செயற்படுத்துவோர் சிலர், ஊடக உரிமையாளர்கள் சிலர் இருக்கின்றனர்.

இது ஒன்றாக கட்டியெழுப்பட்ட ஊழல் வலையமைப்பு.

இந்த வலையமைப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றது.

அதற்கு மிகவும் வலுவான அரசியல் தேவை.

சட்டத்தின் மூலம் மாத்திரம் இதனை செய்ய முடியும் என நம்பினால், அது மிகப் பெரிய முட்டாள்தனம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008