ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை
தற்போதைய அதிபர் முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்பொழுது இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், ஜனதா விமுக்தி பெரமுனா திட்டங்களை மாற்றும் போது பொருளாதார நிலை மாறும், கடன்கள் எங்கே போகும் என்று தெரியவில்லை.
அதிபர் தேர்தலுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது போன்று அல்ல, பொது வேட்பாளரை தெரிவு செய்து அவருக்கு வாக்களிக்கின்றோம்.
வடகிழக்கு மக்களின் பிரச்சினை
அதைச் செய்கிறார்கள், தேர்தல் முடிந்துவிட்டால் எங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், எங்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும்,பொதுவான எதிர்பார்ப்பை நியமிக்கப் போகிறோம்.
வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே செய்கின்றோம், தெற்கில் இருந்து யாரோ ஜெயிக்கப் போகிறார்கள், பொது வேட்பாளராக கேள்வி கேட்க ஒருவரைக் கண்டுபிடிப்போம் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)