தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

Tamils Sri Lanka Narendra Modi India
By Laksi Jun 07, 2024 04:45 PM GMT
Report

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முழுமையாக தலைமையேற்று பங்களிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (7) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அரசுக்கு வாழ்த்துக்கள்.

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்று பின்னர் இந்நிய இலங்கை ஒப்பந்தத்துடன் இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp

இருந்தும் துரதிஸ்டமாக வன்முறைகள் தொடர்ந்தகொண்டிருந்தது. பின்னர் பன்னாட்டு சக்திகள் நாட்டின் உள் விவகாரங்களில் மத்தியஸ்தம் வகித்தும் பேரழிவுடன் வன்முறை அஸ்தமித்துப்போனது.

ரத்ன தேரர் தலைமையில் ஆரம்பமாகும் புதிய கூட்டணி

ரத்ன தேரர் தலைமையில் ஆரம்பமாகும் புதிய கூட்டணி

இலங்கை இந்திய ஒப்பந்தம்

தமிழர்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வம் எட்டப்படவில்லை. ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையே மிஞ்சியது.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp

இருந்தும் காணி, காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர் தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து பின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அவ்வாறாக இருந்த சூழலில் ஜனநாயக முறைப்படி மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கமான முடிவின்றியே இருந்துவருகின்றது.

புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்

இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலம்

இந்த சூழ்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp

இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது.இருப்பினும் புரையோடிப்போயுள்ள தமிழர்களது அரசியல் தீர்வு விடயத்தில் 1983 இனக்கலவரம்முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.

அதேபோன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015