அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு - ரணில் - இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு
இலங்கைக்கான (Srilanka) இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
உத்தியோகபூர்வத் தகவல்கள்
இந்தப் பேச்சு முடிவடைந்தவுடனேயே இந்தியத் தூதுவர் அவரைச் சந்தித்தமை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த உத்தியோகபூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |