இந்தியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி! புறப்பட்டது சிஐடி
இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெஸ்ஸி எனப்படும் பாதாள உலக குற்றவாளியை அழைத்து வருவதற்காக சிஐடி அதிகாரிகள் புறப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் பொடி லெஸ்ஸி கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
நாட்டை விட்டு தப்பியோட்டம்
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சந்தேகநபர் ஒரு சொகுசு கார் ஊர்வலத்தில் புகுந்து கொழும்புக்கு சென்ற நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் குடு சலிந்து எனப்படும் மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து ரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
அதன்போது, குறித்த இரண்டு குற்றவாளிகளும் கடல் வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் இருந்தாக பாதுகாப்பு படையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |