அதிகவிலைக்கு முட்டைகளை விற்பனை செய்த்தவர்களுக்கு 9 இலட்சம் அபராதம்!
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் குழுவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல கடைகளின் குறித்த விற்பனை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த விட்பனையாளர்களுக்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் 9 இலட்சம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு விலை 44 ரூபா
முட்டையினுடைய கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாக இருந்த போதிலும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா 03 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியை 240 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு 03 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம், 210 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
