கொழும்பிற்கு சென்ற பேருந்து டிப்பருடன் மோதி விபத்து!
Sri Lanka Police
Colombo
Kandy
Srilanka Bus
By Sathangani
கொழும்பு (Colombo) - கண்டி (Kandy) வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், ஒரு டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த வீதியில் உள்ள தித்வெல் மங்கட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பிக்கு ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் தெரிவிப்பு
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து, கண்டி நோக்கிச் சென்ற டிப்பருடனேயே மோதியுள்ளது.
இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகே நின்றுள்ளது.
பேருந்தானது பாதை ஒழுங்கை பின்பற்றாமல் தவறான முறையில் பயணித்து, எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதாக தங்கோவிட்ட காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி