தொடரும் யானைகளின் அட்டகாசம்: போராட்டத்தில் குதித்த மக்கள்
Ampara
Sri Lanka
SL Protest
By Shadhu Shanker
பொத்துவில்(Pottuvil) பிரதேச சபைக்குட்பட்ட இலாகுகல உலன்ணுக என்ற கிராமத்தில் யானை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நீதி கோரி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
யானைகள் குறித்த கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளை உடைப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும், மனிதர்களை தாக்கி உயிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையடுத்து, தங்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும், இந்த பிரச்சினைக்கு அரசாங்க அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்