கொத்து மற்றும் தேநீர் விலைகள் அதிகரிப்பு!
Food Shortages
Sri Lanka
By pavan
கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொத்து ரொட்டியின் விலை
இதன்படி, தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் கொத்து ரொட்டியின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி