பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ள சிறிலங்கா..! ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியீடு
European Union
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை அரசாங்கம் சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளியிட்டுள்ளது.
சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போது பயன்படுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியாவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Concerned about reports on the use of the Prevention of Terrorism Act in recent arrests as we refer to information given by #GoSL to the International Community about the de-facto moratorium of the use of #PTA
— EU in Sri Lanka (@EU_in_Sri_Lanka) August 22, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி