நள்ளிரவில் தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து...! 27 பலி - தொடரும் தேடுதல் பணி
தாய்லாந்தில் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்காக் (Bangkok) நகரில் உள்ள மதுபானக் கடை (Bar) ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு கடந்த உடனேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்த போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்த கட்டடத்தின் முதன்மை வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் (Anutin Charnvirakul) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
பலர் சிகிச்சை
மேலும் தெரிவித்த அவர், இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியதுடன் காயமடைந்த மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோர விபத்தின் பின்னர் அங்கு வந்திருந்த பலரைக் காணவில்லை எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |