துர்நாற்றம் வீசும் அரியவகை பூ : பார்க்க படையெடுக்கும் மக்கள்
பலாங்கொடை, வலேபடவின் மனதுங்கந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சுமார் இரண்டு அடி உயரமும், நீண்ட காலமாகப் பூக்கும் ஒரு பெரிய, அரிய வகை கிடாரம் பூ பூத்துள்ளது.
வலேபட மனதுங்கந்த பிரதேசத்தில். இந்தக் கிடாரம் மலர் ஹேமச்சந்திரா என்பவரின் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகிறது. இந்த கிடாரம் பூ கடுமையான துர்நாற்றத்தை வெளியிடுகிறது, மேலும் உள்ளூர்வாசிகள் இந்தப் பூவைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
இன்று காலை மனைவி கண்ட காட்சி
தோட்டத்தின் உரிமையாளர் பி.கே. ஹேமச்சந்திரா கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் ஒரு கிடாரம் மரம் இருந்தது, ஆனால் அது பட்டு போனது. இருப்பினும், இன்று(26) காலை எனது மனைவி அந்த இடத்தில் இந்த மலர் பூப்பதைக் கண்டார்.
அது ஒரு கிடாரம் மலர் என்பது அவருக்கே தெரியாது.
இது குறித்து கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் வந்து பூவை பரிசோதித்து, அது கிடாரம் பூ என்று கூறியதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





