கொலை களமாகும் நாடு: அரசாங்கத்தின் மௌனத்தால் கவலையில் விமல்!
பொதுமக்களை கொலை செய்வது நாட்டில் ஒரு சாதாரண விடயமாக மாறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று(26) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதாள உலக நபர்கள் நாட்டில் சட்டம் மற்றும் விதிமுறைகளை நடைமுறைபடுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் நாட்டை தற்போது ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
மௌனத்தில் அரசாங்கம்
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த நாடு அடைந்துள்ள நிலைமை குறித்து தாங்கள் வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கதைகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், குறித்த விடயத்தில் மௌன நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது தங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
