துமிந்த திசாநாயக்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை (Duminda Dissanayake) ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இன்று (26) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளியான தகவல்களுக்கு அமைய, துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, துமிந்த திசாநாயக்கவை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
