சிஐடியில் முன்னிலையாகியுள்ள ரணில்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முன்னலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (22) அவர் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட லண்டன் சுற்றுப் பயணம் குறித்த மேலதிக விசாரணையொன்றுக்காகவே குற்றப் புலனாய்வுத்திணைக்களம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெர்னாண்டோ மற்றும் உத்தியோகபூர்வ ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் இதற்கு முன்னர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (22) ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என்றும், அதன் பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலுக்கு அனுப்பப்படுவார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
