கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுக்குரிய நிதியை விடுவிக்க தாமதம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அப்போது ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று 21ஆம் திகதி மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்க இருந்த நிலையில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அதற்கான நிதி இதுவரை கிடைக்க பெறாத நிலையில் உடனடியாக அந்த அகழ்வு பணியை மேற்கொள்ளப்படாத நிலை இருப்பதாக நீதிமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு

மேலும் நிதி கிடைக்கப்பெறாமையால் இந்த அகழ்வு பணி மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்த இந்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 31 திகதி ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை, இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்த மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களை அடுத்த தவணை கட்டாயம் பிரசன்னமாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.