புலஸ்தினியை தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பம்
சாய்ந்தமருதில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி இன்று (ஏப்ரல் 27) காலை ஆரம்பமானது.
D.N.A வை மறுபரிசீலனை செய்வதற்காக இறந்தவரின் எச்சங்களை தோண்டி எடுப்பதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இதன்படி, அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்ட எச்சங்கள் அம்பாறை நீதவான் முன்னிலையிலும், ஆரம்ப விசாரணைகளில் ஈடுபட்ட நீதி வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச பகுப்பாய்வாளர்களின் பங்களிப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
D.N.A வை மீள் ஆய்வு செய்வதன் மூலம், கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் சோதனையிடப்பட்டு உயிரிழந்தவர்களில் மதம் மாறிய இஸ்லாமிய தீவிரவாதி மற்றும் சஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிக்கும் புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மின் ஆகியோரின் எச்சங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் உத்தேசித்துள்ளது.
ஏப்ரல் 2019. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடர் குண்டுவெடிப்பில் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய அச்சி முஹம்மது முஹம்மது ஹஸ்துனின் மனைவி சாரா ஜாஸ்மின். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 26 ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர்களில் ஒருவரான மொஹமட் ரில்வான் என்பவரே இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
வெடிவிபத்தில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்தவர்களின் சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் புலஸ்தினியின் தாயாரின் மாதிரியுடன் ஒத்துப் போகவில்லை.
அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சடலங்களை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்