அதிகரித்த டொலரின் பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 12) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 66 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 39 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.23 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 407 ரூபா 18 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 391 ரூபா 08 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360 ரூபா 93 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 346 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

