பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques இல் உள்ள Val de Grâce தேவாலயத்திற்கு அடுத்துள்ள கட்டடத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Grosse déflagration rue Saint-Jacques suite à une explosion place Alphonse Laveran (face au Val de Grâce)#paris #valdegrace #incendie #explosion pic.twitter.com/BSgO6axOqm
— Etienne (@eneveu) June 21, 2023
இன்று புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது காஸ் சிலிண்டரினால் ஏற்பட்ட சம்பவம் எனவும் இதனால் பல கட்டடங்கள் தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
277 rue Saint-Jacques இல் பாரிஸ் அமெரிக்கன் அகாடமி என்ற பேஷன் மற்றும் டிசைனிங் பள்ளியை உள்ளடக்கிய கட்டடத்திற்குள் வெடிப்பு நிகழ்ந்ததாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார்.
தீ கட்டுக்குள்
காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாது என்று பாரிஸ் வழக்கறிஞர் கூறினார்.
உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணியளவில், தீ கட்டுக்குள் உள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
pictures -REUTERS and AFP



