பெண் நூலக அதிகாரிக்கு எதிரான தவறான தகவல் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி, 119 என்ற காவல்துறை அவசர உதவிப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிகுமாறு கொழும்பு மேலதிக நீதிபதி மஞ்சுளா ரத்நாயக்க, கறுவாத்தோட்டம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு பொது நூலகத்தில் பணிபுரியும் பெண் உதவி அதிகாரி ஒருவரின் கைப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 119 அவசர தொலைபேசி எண்ணுக்கு தவறான தகவலை வழங்கியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த ஏமாற்றம்
புகாரைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் நூலகத்திற்குச் சென்று அந்த அதிகாரியின் கைப்பையை ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது போதைப்பொருட்கள் எதுவும் அதில் இல்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவமானம்,துயரம் பெண் அதிகாரி குமுறல்
இந்த சம்பவம் தனக்கு குறிப்பிடத்தக்க அவமானத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதாக பெண் நூலக அதிகாரி கூறினார். எனவே, உடனடியாக விசாரணை நடத்தி நீதியை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
