தடுப்புக்காவலில் உயிரிழந்த குடும்பஸ்தர்! இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல்துறை நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய சிறைக் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைதீவு காவல் நிலைம்
மேலும் காரைதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா என விசாரணைகளில் தெரியவந்தது.
அத்துடன் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலமானது அண்மையில் நல்லடக்கத்திற்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |