யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |