மலையகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
பொகவந்தலாவ (Bogawantalawa) டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது வீட்டில் நேற்று (29.05.2025) இரவு உறங்கி கொண்டிருந்த நிலையில் உயிர்ழந்து காணப்பட்டதாகவும் உயிர்ழந்த நபரின் மூக்கு பகுதியில் இரத்தகரை காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ காவல்துறையினர் குறித்த மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து ஹட்டன் தடயவியல் காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய அரசின் கீழ் வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை : அதிகாரத்தை பறிப்பதாக சத்தியலிங்கம் குற்றச்சாட்டு
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து உயிரிழந்தாரா என காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், மரண விசாரனைகள் ஹட்டன் (Hatton) நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராமமூர்த்தி தலைமையில் இடம்பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



