கொடிய நோயால் பலியான அமெரிக்கர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த நபர் வாஷிங்டனில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மனிதர்களுக்கு இதுவரை ஏற்படாத கொடிய பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல்
குறித்த நபர், H5N5 என்ற பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் உள்ள ஒரு வயதானவர் என குறிப்பிடப்படுகின்றது.
ஒன்பது மாதங்களில் அமெரிக்காவில் ஒரு மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அமெரிக்காவில் வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மனித மரணம் இதுவாகும்.
இருப்பினும், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வைரஸால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |