இன்னும் மூன்று நாட்களில் ஏற்படவுள்ள சூரியகிரகணம்!
Sri Lanka
India
By pavan
2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏற்படவுள்ளது.
இந்த சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46இற்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது.
தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது.
இலங்கையில் கிரகணம்
அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி