வீதியை மறித்து பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்! (படங்கள்)
India
Protest
Jaffna
People
Point Pedro
Fishermen
SriLanka
Supparmadam
By Chanakyan
யாழ்ப்பாணம் - பருத்த்துறை - சுப்பர்மடம் பகுதியில் மீனவர்களினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது தொழில் மற்றும் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பந்தல் அமைத்து தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க மீனவர்கள் முடிவு.
அமைச்சரை மாற்றுமாறும் மீனவர்களை கைதுசெய்யுமாறும் கோரி மீனவர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்