பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

University of Peradeniya Sri Lankan Peoples Floods In Sri Lanka Flood
By Sathangani Aug 03, 2026 09:28 AM GMT
Report

புதிய இணைப்பு

நிலவும் மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் கையொப்பத்துடன் பின்வரும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம்.

மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்துக்கு அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம்.

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்! | Flooding Inside The Peradeniya University Hostel  

ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருவார்களானால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளை பராமரிக்குமாறு விடுதி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

பேராதனைப் பல்கலை விடுதிக்குள் வெள்ளப் பெருக்கு : மாணவர்கள் வெளியேற்றம்! 

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நீர்மட்டம் உயர்வு  

இதேவேளை மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்க, மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்! | Flooding Inside The Peradeniya University Hostel

நேற்றிரவு (02) முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பேராதனை 'களு பாலம' அருகே உள்ள பாலம் புனரமைப்புத் தளம் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குள்ள பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் சில உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்