ஜெருசலேம் வானத்தில் ஏவுகணைகள்: நேரடிக் காட்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் தீவிரமடைந்த நிலையில், ஜெருசலேம் வானத்தில் அதிக இடைமறிப்புக்கள் இடத்பெற்றுள்ளதோடு, பல்வேறான தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை அலைகளை (17வது அலை உட்பட) இஸ்ரேல் மீது ஏவி வரும் நிலையில், இஸ்ரேலிய விமானப்படை தெஹ்ரான் மற்றும் மத்திய இஸ்ரேலில் பரந்த அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது.
ஏவுகணை தாக்குதல்கள் 90% வரை குறைந்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் 80க்கும் மேற்பட்ட போர் விமானங்களைப் பயன்படுத்தி தெஹ்ரானில் உள்ள விமான நிலையங்கள், IRGC தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட இலக்குகளை தாக்கியுள்ளது.
பெரும் வெடிப்புகள் மற்றும் தீப்பிழம்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறான நிலையில் இஸ்ரேலில் தற்போது என்ன நடக்கிறது என்பது தொடர்பில் பகிர்ந்துக்கொள்கிறார் ஜெருசலேமில் உள்ள எமது செய்தியாளர்....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |