அது இலங்கையின் உள்நாட்டு விடயம் :மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிகழ் நிலை காப்பு தொடர்பான சட்டமூலம் இலங்கையின் உள்விவகாரம் எனவும், அதில் வெளிநாட்டு தலையீடு தேவை இல்லை எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் நேற்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ரஷ்யாவின் கருத்து எனவும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தமக்கு கவலையளிக்கக் கூடிய விடயம் அல்ல எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளகப் பிரச்சினை
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டவிதிகளை விதிப்பது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை என ரஷ்ய தூதுவர் கூறியதுடன், இந்த நாட்டில் உள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வெளி நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் கருத்துக்கள் குறித்து ரஷ்ய தூதரகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |