எரிபொருளுக்காக நிற்கும் மக்களுக்கு தேநீர் மற்றும் பாண் வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் (படம்)
எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசைகள்
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் வரிசைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இவ்வாறு எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் றொசான் மகாநாம (Roshan Mahanama), ,தேநீர், பாண் பரிமாறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கே தேநீர் மற்றும் பாண் பரிமாறும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
தேநீர் மற்றும் பாண் பரிமாற்றம்
அதன் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த அவர், “வார்ட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தவைச் சுற்றியுள்ள பெட்ரோல் வாங்க வரிசையில் உள்ள மக்களுக்கு இன்று மாலை சமுக உணவுப் பகிர்வின் குழுவினருடன் நாங்கள் தேநீர் மற்றும் பாண்களை வழங்கினோம்.
We served tea and buns with the team from Community Meal Share this evening for the people at the petrol queues around Ward Place and Wijerama mawatha.
— Roshan Mahanama (@Rosh_Maha) June 18, 2022
The queues are getting longer by the day and there will be many health risks to people staying in queues. pic.twitter.com/i0sdr2xptI
வரிசைகள் நாளுக்கு நாள் நீளமாகி வருகின்றன, மேலும் வரிசையில் இருப்பவர்களுக்கு பல உடல்நல ஆபத்துகள் இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
"தயவுசெய்து, எரிபொருள் வரிசைகளில் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள். போதுமான பானம் மற்றும் உணவைக் கொண்டு வாருங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள நபரைத் தொடர்புகொண்டு ஆதரவைக் கேளுங்கள் அல்லது 1990-க்கு அழைக்கவும். இந்த கடினமான காலங்களில், நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று ரொசான் மகாநாம வலியுறுத்தினார்.

