முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் கைது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க (Prasad Ranasinghe) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (10) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஊழல் குற்றச்சாட்டு
குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில், மன்னர் வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயில் படிகளுக்கு அருகில் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான சிற்பங்கள் பொறிக்கப்பட்ட, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள ‘சண்டகலா’ என்ற கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான விசாரணையில் செல்வாக்கு செலுத்தியதாகவும், அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரசாத் ரணசிங்க மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |