முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விபத்தில் பலி
திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூதூர், சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பேருந்தில் வருகை தந்து மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மஞ்சள் கோட்டை கடக்க முற்பட்டவேளை விபரீதம்
இவ்விபத்து இன்று (14) இடம் பெற்றுள்ளது. இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (71வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உப்புவெளி காவல்துறையினர் விசாரணை
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
