குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka Politician
Sri Lanka
By Shalini Balachandran
முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க தனது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று (10) பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் மற்றும் அமைச்சராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
பரிதாபமாக உயிரிழப்பு
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.
ஏகநாயக்க, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரைப் பராமரித்து வந்தவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் ஏகநாயக்க இறக்கும் போது வீட்டில் தனியாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி