அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
By Independent Writer
அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்