இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெரோயினுடன் மீண்டும் கைது..!
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க(Shehan Madushanka) 2 கிராம் மற்றும் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன்(heroin.) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது நீதவான் ரந்திக லக்மல் ஜெயலத், ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
காவல்துறை தேடுதல் - கதிரையின் கீழ் மறைந்திருந்த மதுஷங்க
பன்னல காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மதுஷங்க மே 25 ஆம் திகதி காவலில் வைக்கப்பட்டார். பன்னல, அலபோதகமவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் ஒரு நாற்காலியின் கீழ் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு கிரிக்கெட் சம்பியன் கிண்ணத்திற்குள் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹட்ரிக் விக்கெட்டால் பிரபலம்
மதுஷங்க முன்னரும் ஒருமுறை வாகனத்தில் போதைப்பொருள் கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர், மேலும் போதைப்பொருளின் ஆதாரம் குறித்து அவரிடம் விசாரிக்க மேலும் அவகாசம் கோரினர். அதன்படி விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.
தற்போது 30 வயதான மதுஷங்க, 2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் முதலில் கைது செய்யப்பட்டதிலிருந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்ததற்காக மிகவும் பிரபலமானவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
