எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப் பத்திரம் (QR குறியீடு) இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீற்றர் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும்
அத்துடன் நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக ஏக்கருக்கு 20 லீற்றர் எரிபொருளும் விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வழமையான சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க வாரத்திற்கு குறைந்தது 35 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |