மஹர சிறைச்சாலைக்கு விரையும் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம்
மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் எனவும் நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (01) ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்
அதற்கமைய, அவர்கள் தும்பர, வெலிகடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையினால் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்தின் போது கைதிகளினால் சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |