மே முதல் வாராந்தம் எரிபொருள் விலைத் திருத்தம்...! அரசின் புதிய திட்டம்
அரசாங்கம் புதிய எரிபொருள் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் ஆரம்பமானதிலிருந்து உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளன.
மே மாதம் முதல்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் 'ப்ரெண்ட்' (Brent crude) ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 117 டொலர் வரை சடுதியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய முறையை நடைமுறப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை மேற்கோள் காட்டி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு வாரத்தில் உலக விலைகள் குறைந்தால், இலங்கை அதற்கேற்ப விலைகளைச் சரிசெய்யும். அதேபோல், அடுத்த வாரம் விலைகள் உயர்ந்தால், உள்ளூர் விலைகளும் அதிகரிக்கப்படும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |