தனியார் பேருந்துகளுக்கு மகிழ்ச்சியான தகவல் - தேவையான அளவு டீசல் இன்று முதல்
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசல்
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
தனியார் பேருந்து ஊழியர்கள் மகிழ்ச்சி
மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள் தொடர்ந்து தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என தனியார் பேருந்து ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி