பொதுத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
எதிர்வரும் தேர்தலில் திருகோணமலை (Trincomalee) மாவட்டம் சார்பில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் (Sriprasanth) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திபின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய மக்கள் முண்ணனி இம்முறை வடகிழக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களுடனான இணைந்து போட்டுயிட ஒற்றுமையாக கருதி இதனை முன்னிருத்தி செயற்படவுள்ளோம்.
தமிழ் மக்களை பலர் வயது முதிர்ந்த நிலையில் மாற்றியுள்ளனர். பொதுக்கட்டமைப்பிஙலும் கூட்டமைப்பில் போட்டியிட மாட்டோம். தமிழ் தேசியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்களை ஒற்றுமைப்பட இந்த தேர்தலில் முன்னிற்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க. குகன் தெரிவிக்கையில் ஒற்றுமையாக செயற்படுவதற்கு கொள்கையை மையப்படுத்தி செயற்படுத்தி 15 வருடங்களாக வடகிழக்கில் செயற்படுகிறோம்.
கொள்கைகளுக்காக பாடுபடுகின்ற அரசியல் கலாசாரம் திருகோணமலையில் உருவாக வேண்டும்.எதிர் கால பாராளுமன்ற தேர்தலில் இதன் மூலம் சிவில் செயற்பாட்டாளர்களையும் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
