ஈழத்தமிழ் பூர்வீக, பிரபல பிபிசி ஊடகர் ஜோர்ஜ் அழகையா மரணம்
பிரித்தானியாவின் பிபிசி ஆங்கில தொலைக்காட்சியில் மிக நீண்ட காலமாக பணியாற்றிய ஈழத்தமிழ் பூர்வீகத்தைக்(மட்டக்களப்பு) கொண்ட ஊடகரான ஜோர்ஜ் அழகையா இன்று தனது 67 வயதில் காலமாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளான குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று அமைதியான முறையில் மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
துணிகரமான ஊடகர்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையை விட்டு தனது பெற்றோருடன் வெளியேறிய தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் அழகையா கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பிரித்தானிய தொலைக்காட்சி செய்திகளில் ஒரு அங்கமாக இருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக அவர் பிபிசி செய்திகளை வழங்கிவந்த இவர் ருவாண்டா முதல் ஈராக் வரையிலான நாடுகளில் வன்முறைகள் கோலோச்சிய காலத்தில் அந்தந்த நாடுகளில் இருந்து துணிகரமான ஊடக பணியயை செய்திருந்தார். இதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.
1994 இல் ஈராக்கின் குர்துகளுக்கு எதிரான சதாம் குசைனின் இனப்படுகொலையை வெளிப்படுத்தியதில் இவரது ஊடகப்பணி முக்கியானது.
புருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார்.
மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து அறிக்கை செய்த முதலாவது பிபிசி ஊடகரும் இவர் தான்.
தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட பிரமுகர்களையும் இவர் செவ்வி கண்டிருந்தார்.
காவுகொண்ட குடல் புற்றுநோய்

கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இந்த நோயுடன் போராடி இன்று அமைதியான மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜோர்ஜ் அழகையாவின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு வருத்தமாக உள்ளதாக பிபிசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜ் அழகையா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை விட, அவரது இரக்கம், பச்சாதாபம் மற்றும் அற்புதமான மனிதாபிமானத்தால் அனைவராலும் நேசிக்கப்பட்டதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்